Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

தனிமையில் நான்,...

| 0 comments | 23.4.08
|



தனிமையை நான் நேசிக்கிறேன்,
உன் முகம் ஒளிரும் என்றோ ?!,...

தென்றலை நான் உணர்கின்றேன் ,
உன் குரல் ஒலிக்கும் என்றோ ?!,...

காற்றை நான் சுவாசிக்கிறேன்,
உன் சுவாசம் கலந்திருக்கும் என்றோ ?!,...

இரவினில் நீண்டநேரம் விழித்திருக்கிறேன்,
நீயும் விழிதிருப்பாய் என்றோ ?!,...

காலையில் விழித்தெழ மறுக்கின்றேன்,
நீ கலைந்து விடுவாய் என்றோ ?!,...

உன்னையே !
நினைத்து என்னிதயம் மகிழ்கின்றது,
நீயும் நினைத்துக்கொண்டு இருப்பாய் என்றோ ?!!!,...

-மதி.பிரகாஷ்,...

தெரியுமா?,...

| 0 comments | 8.4.08
|



கவிதை,...
என்பது,
எழுத்தின் வடிவம் !
அல்லது,
காதலின் வடிவம் !

காதல்,...
என்பது,
ஆசையின் குமுறல் !
அல்லது,
அன்பின் குமுறல் !

அன்பு,...
என்பது,
நட்பின் வலிமை !
அல்லது,
நடிப்பின் வலிமை !

நட்பு,...
என்பது,
இன்பத்தின் கூடல் !
அல்லது,
இழப்பின் கூடல் !

-மதி.பிரகாஷ்,..

ஒன்று, இரண்டு, மூன்று, ...

| 1 comments | 2.4.08
|



ஓரெழுத்து கவிதை நீ !
ஈரெழுத்து கவிதை தோழி!
மூன்றெழுத்து கவிதை நட்பு!...

- மதி.பிரகாஷ்.,



Related Posts with Thumbnails
 

திருக்குறள்