Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

கவிதையை நோக்கி,...

| 0 comments | 28.3.08
|



இரவின் வெளியீடு,
விடியலை நோக்கி !

இருளின் வெளியீடு,
வெளிச்சத்தை நோக்கி !

எண்ணத்தின் வெளியீடு,
வெற்றியை நோக்கி !

என் இதயத்தின் வெளியீடு,
கவிதையை நோக்கி !!!,...

-மதி.பிரகாஷ்,...

பிரிவும் சுகமானது,...

| 0 comments |
|



முன்னவன் பார்வையில் அவள்,
பின்னவன் காண்கையில் கானல் நீர் !

முன்னவன் கண்ட அவள்,
பின்னவன் காண்கையில் முன் அவன் !

அவளின் நா திறக்கையில் ,
அவனின் நா திறந்தது !

திறந்ததனால் எழுந்த,
மொழியினிலே மொழியும் கலந்தது !

சிறுமணிதுளி அளவு காலத்தில்,
பிரிவு தழுவியது அவர்களை !

அந்த பிரிவும் சுகமானதானது ,
அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி !?,...

-மதி.பிரகாஷ்,...

நேசம்,...

| 2 comments | 26.3.08
|



நிலவின் ஒளியில்
நீரின் குளிரில் !
மலரின் மனத்தில்
மாலையின் சுகத்தில் !

மயிலின் அழகில்
மௌன மொழியில் !
இடியின் இசையில்
இசையின் சுகத்தில் !

மண்ணின் வாசத்தில்
உயிரின் சுவாசத்தில் !
மலையின் உயரத்தில்
அன்பின் ஆழத்தில் !

அனைத்திலும் உணர்கின்றேன்
உனது நேசத்தை !!!

-மதி.பிரகாஷ்.,

மலரும்,...

| 1 comments |
|


காதலி உள்ளிருந்தால்
கண்ணீர் மலரும் !

கண்ணீர் உள்ளிருந்தால்
கவிதை மலரும் !

கவிதை உள்ளிருந்தால்
காதல் மலரும் !

காதல் உள்ளிருந்தால்
மௌனம் மலரும் !

மௌனம் உள்ளிருந்தால்
வார்த்தை மலரும் !

வார்த்தை உள்ளிருந்தால்
கனவு மலரும் !

கனவு உள்ளிருந்தால்
நினைவு மலரும் !,...

நினைவுடன் ,...

-மதி.பிரகாஷ்,...

மருமகள்,...

| 0 comments | 24.3.08
|



கையில் விளக்குடன்
ஒரு பெண்
வீட்டிற்குள் புகுந்தாள்

உள்ளே இருந்தவர்கள்
யாரென்றனர் ?!!
அவளை பார்த்து ,...

இன்னுமா புரியவில்லை !
நான் தான் உங்கள் வீட்டுக்கு
விளக்கேற்ற வந்தவள்,...

என்ன ?!!!,....

-மதி.பிரகாஷ்.,

நட்பு,...

| 1 comments |
|



உள்ளங்கையில்
உன்னை வைத்து,

உறவை தள்ளி வைத்து,

நினைத்து பார்த்தேன் !
உனக்கும்,
எனக்குமுள்ள நட்பை !

நட்புடன் ,...

-மதி.பிரகாஷ்.,

முதிர் கன்னிகள்

| 1 comments | 22.3.08
|




கண்களில் ஈரம்
காயும் முன்னே,

எங்களை ஏற்கும்
கரங்கள் வருமா ?!

கண்ணீருடன்
பூக்கள்,...




-ம.பிரகாஷ்.,


இளமையில் வருவது,...

| 0 comments |
|



இதழ்களால் வருவதில்லை,
இதயத்தால் வருவது !

இன்பத்தால் வருவதில்லை,
இன்பமாக வருவது !

துணிந்தால் வருவதில்லை,
துணிவாக வருவது !

கண்முன் வருவதில்லை,
கனவாக வருவது !

கனியாக வருவதில்லை,
கனிவாக வருவது !

சுவைத்தால் வருவதில்லை,
சுவையாக வருவது !

எழுத்தில் வருவதில்லை,
எழுத்தாய் வருவது தான் காதல் ,.....

-மதி.பிரகாஷ்,...



ஆசை,...

| 1 comments | 20.3.08
|


எனது துயரைப் போக்க,
நான் உன்னை ஏந்தினேன் !

உனது துயரை நீக்க,
நீ என்னை ஏற்றாய் !

எனது துயர் உனது,
உயிரின் பிரியலாக அமையும் !

என அறியாத நான்,
அறிந்தும் ஏற்ற நீ !

உன்னை போல் பிறவி எடுக்க,
ஆசை ! நானும் எழுதுகோலாக !!.,

-மதி.பிரகாஷ்.,

ஓவியமே,...

| 0 comments |
|


முதலில் வண்ணந்தான் கண்டேன்,
முதுகில் வளைவுகள் ஏன்கண்டேன் !

முகத்தில் வெக்கந்தான் கண்டேன்,
உதட்டில் சிரிப்பை ஏன்கண்டேன் !

உன்னில் உருவந்தான் கண்டேன்,
கண்ணில் கருவிழியை ஏன்கண்டேன் !

முதுகில் கூந்தலைதான் கண்டேன்,
கூந்தல் மாலையினுள் ஒழிய ஏன்கண்டேன் !

உன் அழகைதான் கண்டேன்,
ஓவியமே உன்னை உயிராக ஏன்கண்டேன் !

-மதி.பிரகாஷ்.,

சிதறல்கள்,....

| 1 comments | 18.3.08
|




எனது ஓவியத்தில் இடமளித்தேன்,
வண்ணங்களை சிதறடித்தாய் !

எனது கவிதையில் இடமளித்தேன்,
கற்பனையை சிதறடித்தாய் !

எனது விழிகளில் இடமளித்தேன்,
பார்வையை சிதறடித்தாய் !

எனது இதழ்களில் இடமளித்தேன்,
சிரிப்பை சிதறடித்தாய் !

எனது இதயத்தில் இடமளித்தேன்,
எண்ணங்களை சிதறடித்தாய் !

என்னில் இருந்து சிதறிய சிதறல்கள்,
யாவும் நீயே !!

- ம . பிரகாஷ்.,

காதல்,...

| 0 comments |
|


கண்களை கசக்கி கொண்டு,
வாசலில் நின்றாய் !

கனவுகளை சுமந்து கொண்டு,
கட்டிலில் விழிதாய் !

எதையோ பரிகொடுத்ததுபோல்,
உடம்பை கெடுத்தாய் !

இத்தனையும் எதனால் ?!
என்று யோசித்துப்பார்.

உனக்கே புரியும்,
காதல் உனக்குள் எழுந்த உண்மை !!!,....

- மதி. பிரகாஷ்,.....

Related Posts with Thumbnails
 

திருக்குறள்